ஈரோடு ஈஸ்வரன் ப்ரோதேர்ஸ் பணியாளர்கள் கேட்டு கொண்டதன் பேரில் எழுதியது...
தொழில் கூடத்தில் பணிபுரிவோர் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
அதிகம் பேசக் கூடாது. முதலாளி கேட்டால்தான் ஆலோசனை சொல்ல வேண்டும்.
பொருத்தமான சந்தர்பங்களில் முதலாளியைப் புகழ வேண்டும். எவ்வளவு சிறிய விஷயமாயினும் முதலாளியிடம் சொல்லிய பிறகு தான் செய்ய வேண்டும்.
முதலாளியிடம் அதிகம் நெருங்கக் கூடாது. இருந்தாலும் விலகுவது போல் காட்டிக் கொள்ளவும் கூடாது.
எவ்வளவு தான் முதலாளி தன்மேல் நம்பிக்கை வைத்திருந்தாலும் எந்த நேரத்திலும் தன்னை வேலையில் இருந்து நீக்கி விடுவான் என்று நினைத்து அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.
முதலாளி மேல் அதிக நம்பிக்கை வைப்பது முட்டாள்தனம். முதலாளி தன் மேல் பாசத்தோடு இருபத்தாக நினைத்து அவருடைய வாகனத்திலேயோ இருக்கைலேயோ அமர்வதைத் தவிர்க்க வேண்டும்.
முதலாளியால் மதிக்கப்படும் போதும் புகழப்படும்போதும் இறுமாப்புக் கொள்ளக் கூடாது. அவமதிப்படையும்போது சோர்வடையக் கூடாது. தன்னிடத்தில் நம்பகமாகக் சொல்லப்பட்ட ரகசியத்தை வெளியிடக் கூடாது.
கடைக்கு வரும் வாடிக்கையாலார்களிடமிருந்து எந்த விதப் பரிசுகளையும் பெறக்கூடாது. மற்ற பணியாளர்களைப் பார்த்துப் பொறாமை கொள்ளக் கூடாது.
மற்ற பணியாளர்களில் ஒருவனை முதலாளி தன்னுடைய ஒற்றனாக வைத்திருக்கலாம்.
முதலாளி நுண்ணறிவும் திறமையும் கொண்டவனைத் தவிர்த்து முழு முட்டாளைக் கூட அதிகாரம் நிறைந்த நிலையில் வைத்திருக்கலாம். இப்படிப்பட்ட முரண்ப்பட்ட தன்மையை மனதில் கொள்ளக் கூடாது.
கடையில் இருக்கும் பெண்களிடதும் கடைக்கு வரும் பெண்களிடத்தும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஆனால் தான் மிகவும் ஜாக்கிரதையானவன் என்பதை வெளியில் காட்டிக் கொள்ளக் கூடாது.
மென் மையின்றி யாராவது பெண்களிடம் நடந்தால் அதைப்பற்றி சிறிதளவும் கருத்துக் கூடத் தெரிவிக்கக் கூடாது.
"செய்யும் தொழிலே தெய்வம்
திறமைதான் நமது செல்வம்"
Wednesday, February 17, 2010
Sunday, December 6, 2009
பிறந்த நாள் வாழ்த்து - அசோக்
என் உயிராகவும் உயிரின் உள்ளோடும்
உணர்வாகவும் விளங்குகின்ற அருமை மகன் அசோக் குமாருக்கு
அப்பா அம்மா வழங்கும் பிறந்தா நாள் வாழ்த்துக்கள்.
தமிழ் எழுத்தின் முதல் எழுத்தை தலை எழுத்தாய் கொண்டவனே
இன்று உனக்கு பிறந்த நாள்.
25 ஆண்டுகள் நிறைவு பெற்று 26 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் என் செல்வமே. நீ நீடூழி வாழ வாழ்த்துகிறேன்..
சீறும் சிறுத்தையே
நீ உறங்கி வெளியேறிய குகை
உன்னை வாழ்த்துகிறது
மராட்டிய மண்ணிலே தவழ்ந்து விளையாடும் தென்றலே
பால் தாக்கரே உன்னைச் சந்தித்திருந்தால்
கொள்கையை மாற்றி இருப்பார்.
எம் மண்ணிலே இருந்தாலும்
அம் மண்ணே நம் சொந்த மண் என
எண்ணி மகிழ வேண்டும்
என அன்றொரு நாள் நான் உரைத்தேன்
நினைவுண்டா உந்தனுக்கு
யாதும் ஊரே யாவரும் கேளிர்
நன்றும் தீதும் பிறர்தர வாரா
எனும் கணியன் பூங்குன்றனாரின் வைர வரிகளை
மனதிலே தேக்கியுள்ளேன் என்றாய்.
சிரித்து மகிழ்ந்தேன்
சிந்தை குளிர்ந்தேன்
பெற்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை
சான்றோன் எனக் கேட்ட தாய்
எனும் வள்ளுவரின் வாய் மொழிக்கு
வலு சேர்க்க வந்தவனே
கல்லாத ஏழை நான்
கண்டெடுத்த புதையல் நீ
கார்த்திகை திங்களில்
மதி நிறைந்த நன்னாளில்
என் குலம் தழைக்க வந்த
குலக் கொழுந்தே
கம்பன் புகழ் போல
கன்னித் தமிழ் போல
கங்கையின் புனிதம் போல
காவிரியின் மணல் அளவு போல
பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு
வாழ்வாங்கு வாழ
வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்.
இப்படிக்கு
அப்பா, அம்மா, சிவன்மலை பாட்டி
அக்கா, மச்சான், மாமா, அத்தை, ஈரோடு தாத்தா.
உணர்வாகவும் விளங்குகின்ற அருமை மகன் அசோக் குமாருக்கு
அப்பா அம்மா வழங்கும் பிறந்தா நாள் வாழ்த்துக்கள்.
தமிழ் எழுத்தின் முதல் எழுத்தை தலை எழுத்தாய் கொண்டவனே
இன்று உனக்கு பிறந்த நாள்.
25 ஆண்டுகள் நிறைவு பெற்று 26 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் என் செல்வமே. நீ நீடூழி வாழ வாழ்த்துகிறேன்..
சீறும் சிறுத்தையே
நீ உறங்கி வெளியேறிய குகை
உன்னை வாழ்த்துகிறது
மராட்டிய மண்ணிலே தவழ்ந்து விளையாடும் தென்றலே
பால் தாக்கரே உன்னைச் சந்தித்திருந்தால்
கொள்கையை மாற்றி இருப்பார்.
எம் மண்ணிலே இருந்தாலும்
அம் மண்ணே நம் சொந்த மண் என
எண்ணி மகிழ வேண்டும்
என அன்றொரு நாள் நான் உரைத்தேன்
நினைவுண்டா உந்தனுக்கு
யாதும் ஊரே யாவரும் கேளிர்
நன்றும் தீதும் பிறர்தர வாரா
எனும் கணியன் பூங்குன்றனாரின் வைர வரிகளை
மனதிலே தேக்கியுள்ளேன் என்றாய்.
சிரித்து மகிழ்ந்தேன்
சிந்தை குளிர்ந்தேன்
பெற்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனை
சான்றோன் எனக் கேட்ட தாய்
எனும் வள்ளுவரின் வாய் மொழிக்கு
வலு சேர்க்க வந்தவனே
கல்லாத ஏழை நான்
கண்டெடுத்த புதையல் நீ
கார்த்திகை திங்களில்
மதி நிறைந்த நன்னாளில்
என் குலம் தழைக்க வந்த
குலக் கொழுந்தே
கம்பன் புகழ் போல
கன்னித் தமிழ் போல
கங்கையின் புனிதம் போல
காவிரியின் மணல் அளவு போல
பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு
வாழ்வாங்கு வாழ
வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்.
இப்படிக்கு
அப்பா, அம்மா, சிவன்மலை பாட்டி
அக்கா, மச்சான், மாமா, அத்தை, ஈரோடு தாத்தா.
Subscribe to:
Posts (Atom)